ஊசிகள்வி
கவிஞர் மீரா
சீதை பதிப்பகம்
விலை ரூபாய் 50
1974ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. முழுவதும் சமூகச் சீர்கேடு, அரசியல் அவலங்களைத் தோலுரிக்கும் கவிதைகள். பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இப்போதைய அரசியலுக்கும் பல கவிதைகள் பொருந்துகின்றன. அரசியல்வாதி, ஊழல், போலித் தமிழன் எனப் பல விசயங்களைப் பேசுகிறது தொகுப்பு. ஊரே கொண்டாடும்,
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்-
மைத்துனன் மார்கள்
எனவே
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
என்ற கவிதை இத்தொகுப்பில் தான் உள்ளது.
சிக்கனமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆடம்பர செலவு செய்யும் பிரதமர் குறித்த கவிதையும் உண்டு. சினிமாவில் அரசியல் தேடும் தமிழ் மக்கள் அன்றும் இருந்துள்ளார்கள். கல்விக்கு லஞ்சப் பட்டியல் அப்போதும் இருந்துள்ளது... இப்படி இவை யாவும் கவிதைகளில்.
வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்
மீராவின் அரசியல் கவிதைகளை.
வாழ்த்துகள்...
No comments:
Post a Comment