நூல் விமர்சனம்
அய்! உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்!
ராஜிலா ரிஜ்வான்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
80 பக்கங்கள்
80 ரூபாய்
குழந்தைகளின் உலகத்திற்குள் போய்விட்டோம் என்றால் நேரம் காலம் தெரியாது. அங்கு அவர்கள் ஆடலாம், பாடலாம், உட்கார்ந்து இருக்கலாம், விளையாடலாம், தூங்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோழர் ராஜிலா ரிஜ்வானின் படைப்புலகத்திற்குள் குழந்தைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். இந்த புத்தகத்தில் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு. ஆம், ஒவ்வொரு கதைகளிலும் பாடல் வருகிறது. அந்த பாடலும் நடனமாடி, மகிழ்ந்து கொண்டாடும் பாடல்கள்.
சிறுசேமிப்பிற்கு என்று ஒரு கதை, காய்கறி தின்னாமல் ஓரமாக எடுத்து வைத்துவிட்டு சாப்பிடும் குழந்தைகளுக்கான ஒரு கதை. கடலுக்குள் உள்ள உயிரினங்கள் என்னென்ன என்று அறிய ஒரு கதை, பள்ளிக்கூடத்தில் பாடம் மட்டுமே படிக்கும் குழந்தைகள் பாடல் கதை என்று எதுவும் தெரியாமல் வேதனையான மனநிலையில் வாழும் குழந்தைகளின் கதை. ஒவ்வொரு கதைகளும் அட்டகாசமாக அமைந்திருக்கின்றன. கிரீடம் சூடிய அழகி, ட்டொயான் டொஸ்க் வனிதா, அய்!உருகாத மாம்பழ ஐஸ்கிரீம், நூலகம் சென்ற பட்டாம்பூச்சி, டம் டம் டம் பேய் வருது, மியாமியும் பவ்வியும் என்பன போன்ற கதைகளின் தலைப்பும் நம்மை உள்ளுக்குள் இழுத்து விடும் வண்ணம் அமைந்திருக்கின்றன. கரு கரு கரு கரு கட்டெறும்பு, டிங்கர டப்பா டிங்கர டப்பா டிங்கர டப்பா டோய், ஏலேலோ ஐலசா ஏலேலோ ஏலேலோ ஐலசா ஏலேலோ என்பவையெல்லாம் பாடலின் துவக்க வரிகள். இன்னும் பாடல்கள் இருக்கின்றன. புத்தகத்தை வாங்கிப் பாருங்கள். குழந்தையாக மாறி, குழந்தையாக கதை கேட்டு, குழந்தையாக பாடல் பாடி, குழந்தையாக நடனம் ஆட ஒரு புத்தகம்.
வாழ்த்துக்கள் தோழர்
ராஜிலா ரிஜ்வான்.
யாழ் தண்விகா
❤️

No comments:
Post a Comment