பெரியோன்
ராஜிலா ரிஜ்வான்
நாற்கரம் வெளியீடு
நூற்று எழுபது ரூபாய்
136 பக்கங்கள்
புதினா போட்டி 2024 குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல்.
சாரா, ஆமினா, தேவி, மேனகா, சுமையா, தேவ், சதீஷ் மற்றும் அபூபக்கர் மதுரையில் சேர்ந்து பி.எட். காலேஜ் படித்து வருகிறார்கள். பி.எட். பயிற்சி காலம் முடிந்தவுடன் ஒவ்வொருவர் வீடாக இரண்டு இரண்டு நாள் தங்கி மகிழ்வை வெளிப்படுத்துகிரார்கள். கடைசியாக சாராவின் வீட்டில் பயணம் முடிகிறது. இவ்வாறு பயணம் முடிந்த பின் இனி அடுத்து அவரவர் திருமணத்தில் நாம் சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சாராவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயதார்த்தத்தை வைத்துத்தான் வில்லங்கம் தொடங்குகிறது.
சாரா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண். சதீஷ் இந்து மதத்தைச் சார்ந்தவன். இருவருக்கும் காதல் உள்ளது தெரியவருகிறது சாராவிற்கு திருமணம் நிச்சயம் என்னும் பொழுது தான் சதீஷிற்கு அவள் மேல் காதல் வருகிறது. சாராவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யும்பொழுது தான் சதீஷ் மேல் காதல் வருகிறது. இந்த காதல் கைகூடியதா என்பதுதான் மீதிக்கதை. சமகாலத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனையை வைத்து எவ்வளவோ பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த காலகட்டத்தில் காதல் திருமணம், அதுவும் இந்து முஸ்லிம் திருமணம் என்பதை நாவலில் கொண்டு வந்தமைக்காக தோழர் ராஜிலா ரிவ்வான் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அபூபக்கர் சதீஷ் நம்பர்களில் வரக்கூடிய ஒரு முஸ்லிம் இளைஞன். ஆமினா, சுமையா சாராவின் நண்பர்களாக வரக்கூடியவர்கள். இவர்கள் இந்த காதலை வேண்டாம் என்று கூறினாலும் சாராவின் பெற்றோரிடம் கூறுவதைப் போல ஒரு காட்சிகூட இல்லை. இது முரணாக உள்ளது. அப்துல்லா, சாஜிதா இருவரும் சாராவின் பெற்றோர். இவர்கள் இருவரும் மகளின் மேல் பிரியமாக இருக்கிறார்கள். இந்த பிரியத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்துமாறு ஏதாவது காட்சி அமைப்புகள் வைத்திருக்கலாம். முத்துகிருஷ்ணன் லட்சுமி இவர்கள் சதீஷின் பெற்றோர்கள். இவர்கள் வீட்டில் ஒரு கலப்பு திருமணம் நடக்கிறது. சதீஷ் அக்காள் கலப்பு திருமணம் செய்வதால் வீட்டை விட்டு விரட்டப்படுகிறாள். இச்சூழலில் சதீஷும் காதல் திருமணம் செய்ய முயற்சி செய்கிறான். இரண்டு குடும்பங்களும் கடைசியாக காவல் நிலையத்தில் சந்திக்கிறது. அங்கு காதல் கைகூடியதா என்பதை ஒரு நீள் வசனம் போல் கொண்டு செல்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமா என்ற பதட்டத்தை கொண்டு வரும் காட்சிகள் இல்லை. பெரியோன் நாவலில் வரும் சமூகம் இங்கு உருவாக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரு மதத்திற்கு உள்ளே ஜாதியை வைத்து மோதல், வேறு மதம் என்றால் மதங்களுக்கு இடையே மோதல் என்பன போன்ற சிக்கல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் வருகிறது. சதீஷின் சித்தப்பா, பயாஸ் கேரக்டர்கள் இன்னும் பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியான சமூகம் உருவாக என்றைக்கும் எதிராக இருப்பார்கள். இவர்களை எல்லாம் மீறி நல்லபடியாக வாழ வேண்டி இருக்கிறது.
முதல் நாவல். நல்ல துவக்கம். வாழ்த்துக்கள் தோழர்.
பெ.விஜயராஜ் காந்தி
No comments:
Post a Comment