Friday 16 September 2022

சமூக நீதி நாள் விழா 17.09.2022


அன்பிற்கினிய தோழமைகளுக்கு, 
வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம் கிளை முன்னெடுத்த சமூக நீதி நாள் கவிதைப் போட்டி, மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பேரன்பு. சனாதனம் துளிர்க்கும்போதெல்லாம் அதனை தீவிரமாக எதிர்த்து எப்போதும் களமாடும் மண் தமிழகம். அதற்காக பல தலைவர்கள் நம் மண்ணிலிருந்து போராடி வந்திருக்கிறார்கள். அத்தலைவர்களில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு சிறப்பிடம் உண்டு. அத்தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்ட போட்டிக்கு கவிதைப் பிரிவுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும், ஓவியப் பிரிவுக்கு எண்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களும் வந்திருந்தன. எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவுதான் என்றாலும் இவ்விழா மிகக் குறுகிய காலத் திட்டமிடல் என்பதையும் கருத்தில் கொள்வோமாயின் இந்த எண்ணிக்கை என்பது மிகப் பெரியது. மிகச் சிறப்பாக தங்களது படைப்புகளை ஒவ்வொருவரும் அனுப்பியிருந்தாலும், போட்டி என்பதன் காரணமாக ஒவ்வொரு கவிதையையும், ஒவ்வொரு ஓவியத்தையும் மிகக் கவனமாகப் பரிசீலித்து பெரியகுளம் கிளை தேர்வுக் குழுவினரால் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பெரியகுளம் கிளையின் சார்பாக வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு 17.09.2022, சனிக்கிழமை காலை 10 மணிக்கு பெரியகுளம் வடகரை, அரண்மனைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் கூடத்தில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் பெரியாரின் வழி செல்லும் முற்போக்குச் சான்றோர்களை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்வில் இந்த வருடத்திற்கான பகுத்தறிவுச் சுடர் விருது தோழர் மு.அன்புக்கரசன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. தந்தை பெரியாரை கொண்டாடும் விதமாக, பகுத்தறிவுச் சுடர் விருது பெறும் தோழரைப் பெருமைப்படுத்தும் விதமாக, போட்டிகளில் வெற்றிபெற்ற, பங்கேற்ற அனைவரையும் பாராட்டும் விதமாகவும் அனைவரும் நிகழ்வில் குறிப்பிட்ட நேரத்திற்குக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்புறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து இன்னும் பல நிகழ்வுகளில் இணைந்து செயல்படுவோம். வெற்றி பெற்றோர் விபரம் கீழ்வருமாறு.

#கவிதைப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
லக்சனா
இரண்டாம் பரிசு 
உமேஷ்
மூன்றாம் பரிசு
பாவனா ஸ்ரீ

சிறப்புப் பரிசுகள்
அனுஸ்ரீ
கனிஷ்கா
தீபதர்ஷினி
கோ.அருணா
க.அக்சயா
N.தர்ஷினி
ரா.கோகிலா ஸ்ரீ
நவ குமாரன்
 
#கவிதைப் போட்டி
#18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
ராஜிலா ரிஜ்வான்
இரண்டாம் பரிசு
கம்பம் பிரபஞ்சன்
மூன்றாம் பரிசு
ஹேமலதா, நாக நந்தினி

#சிறப்புப் பரிசுகள்
துர்கா தேவி
அமிர்தா தமிழரசன்
பூர்ணிமா கணநாதன்
வைகை சுரேஷ்
கோ. பாலகிருஷ்ணன்
வசந்ததீபன்
முத்துச் செல்வம்
பாலமுரளி
உதயா
நாக பிரபு
லட்சுமி குமரேசன்
செல்ல முருகேசன்
அஞ்சு மகி
வைகை மகன்
க.போ. சுருளியாண்டவர்

#ஓவியப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு
முதல் பரிசு
கௌசல்யா 
இரண்டாம் பரிசு
வசந்த வேல்
மூன்றாம் பரிசு
யுவராஜா

சிறப்புப் பரிசுகள்
நதியா
கிஷோர்
அமிழ்தினி
பாண்டீஸ்வரபிரசாத்
ஹரீஷ்
அர்ச்சனா
சிவக்கார்த்திகா
வர்ஷா
தர்ஷினி
ச.சூர்யா

#ஓவியப் போட்டி
#18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு
மு.தமிழ்மணி
இரண்டாம் பரிசு
பிரவீன்குமார்
ஜா.மேக்டலீன்
மூன்றாம் பரிசு
முத்துப்பாண்டி

சிறப்புப் பரிசுகள்
த.புனிதா 
தேனி கண்ஸ்
தாழை அரசன்
போஜனா
ஜெகதீஸ்வரன்
கீர்த்தனா

விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் அனைத்துத் தோழர்களுக்கும் வாழ்த்துகள். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முற்போக்கு உணர்வாளர்களே, கலைஞர்களே, கவிஞர்களே, வாருங்கள். நிகழ்வில் சந்திப்போம்.

தோழமையுடன்
கு.தினேஷ் பாபு
கிளைச் செயலாளர்
யாழ் தண்விகா
கிளைத் தலைவர்
இரா.சுந்தர்ராஜன்
கிளைப் பொருளாளர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
பெரியகுளம் கிளை