Sunday 27 March 2022

"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன் #டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்

 




"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன்


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


திராவிடர் கழக வெளியீடு


விலை ரூ.20 பக்கங்கள் 32


வாழ்க்கை முழுதும் போராட்டம் என வாழ்ந்த ஒரு புரட்சியாளரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் நினைவலைகளாக. ஓர் இந்து, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்த அயோக்கியத்தனத்திற்கு கொஞ்சமும் குறையாது பார்சி, முகமதியர், கிறித்துவர் மதத்தவர் செய்த செயல்களும் என்பதை தன் வாழ்வில் நிகழ்ந்த செயல்கள் மூலம் கூறுகிறார் அம்பேத்கர். மருத்துவம் பார்க்க தாழ்த்தப்பட்டோர் வாழும் தெருவுக்குள் வராமல், தெருவை விட்டு வெளியே நோயாளியை அழைத்து வரச் சொல்லும் மருத்துவரின் குரூரம், படித்து வேலைக்கு வந்தபின்னும் அவன் மேல் தீண்டாமை முறையைப் பின்பற்றும் சமூகம் என தான் கண்ட நிகழ்வுகளையும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அம்பேத்கர்.


வாசிக்க வேண்டிய நூல். மேலும்இந்த சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளை அறியவும் அதன் நீட்சியாக இன்னும் நடைபெறும் சாதியக் கொடுமைகளைக் களையவும், சமூகம் நல்வழிப் பாதையில் செல்ல விரும்பும் உள்ளங்கள் எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டிய நூலும் கூட.


யாழ் தண்விகா 


❣️









No comments:

Post a Comment