Wednesday 25 May 2022

உன் குரலில் என் வாழ்க்கை...


 கொஞ்சம் மழை தான்

வெயில்தான்

பனிதான்

மந்தமான வானிலைதான்

வெக்கைதான்

எல்லாம் அதீதமாகுப் பூக்கும்

குறைவாக மாறும்

நீ அருகில் இருப்பதைப் பொறுத்தோ

தூரத்தில் இருப்பதைப் பொறுத்தோ...


பெரு மயக்கத்திற்காகவே

கழுத்தின் வழியாக

காது மடல் தீண்டி

பின்

முன் முகம் பார்த்தல்...


எந்தச் சாயலும் இல்லாத

அழகு உன்னிடம்.

அது எதில் தான் இல்லை

பேசுவதில்

நடையில்

நடனத்தில்

உடையில்

முத்தத்தில்

கட்டியணைப்பில்

கவிதையில்

வெட்கத்தில்

கனவில்

...

ஆதலினால்

உன்னைப் பேரார்வத்துடன் எப்போதும் காதலிப்பேன்...

யாழ் தண்விகா

❣️

No comments:

Post a Comment