Friday 3 June 2022

கண்ணும் கருத்தும்...


 

❣️

நெடுந்தூர பயணம்

உடலெங்கும் வலி

களைப்பாயிருக்கு


ஒரு காஃபி குடிங்க

சரியாகிடும்


அதிலெல்லாம் சரியாகும்

எனத் தோணல


அப்போ ஒரு டேப்லெட் வாங்கிப் போடுங்க


அதிலும் சரியாகாத அளவுக்கு உடம்பிருக்கு


ரெண்டு நாள் லீவு போட்டு

அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தாம

வீட்டுல இருங்க

சரியாகும்


ஒரு முத்தம் தந்தா எல்லாம் சரியாகும்

ஏன்டி இப்படி கெஞ்ச வைக்குற


ஒரு முத்தம் கொடுடின்னு கேட்காம

ஏன்டா இப்படி சுத்தி வளைக்குற...


❣️

கண் மலர்களின் அழைப்பிதழ்


எப்படியிருக்கும் எனக்கூட தெரியவில்லை


பார்த்து வருடங்களாச்சு


ராஜா சார்...

இதே பாடலை

அவள் காதோரமாகவும்

கொண்டு சேர்க்கவும்...


❣️

போத்தலில் நிரம்பியிருக்கும்

மதுவின் அசைவலையில்

பூக்கும் போதை

உன் இதழசைவில்...


பேசு அன்பே பேசு...


❣️

எப்போப்பாரு

கல்யாணம் குழந்தைங்க

எதிர்காலம்ன்னுக்கிட்டு...

வேற நெனப்பே வராதா...


அதிகமாகக் காதலிக்கக் காதலிக்க

கல்யாணம் குழந்தைங்க எல்லாம்

தன்னாலே அமைஞ்சிடுமாம்


யார் சொன்னா அப்படி...


காதலே சொல்லுச்சு


குழந்தைகளைப் பெத்துக்கிட்டு

அதுக்கப்புறமா கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆகாதாமா?


ம்ம்ம் அதானே...


என்ன அதானே...

வாடா கட்டிக்க...


❣️

விலங்குகள் பறவைகள்

பூக்கள் பூச்சிகள்

காடு மலை எல்லாம் வரைந்து

சின்னச் சின்ன மாதிரி உருவங்களைப் பணி நிமித்தம் செய்து

நம்மையும் ஓவியமாகச் செதுக்கி...


கண்ணும் கருத்தும் காதலெனத் தகும்...


இல்லடி இல்லடி

எண்ணும் எழுத்தும்

கண்ணெனத் தகும்...


❣️

உன்னைப் பற்றி எழுதுபவை

துதிப்பாடல்கள்


உன்னைப் பற்றி பேசுபவை

பிரசங்கம்


உன்னைப் பற்றிய கற்பனைகள்

நிஜமாக வேண்டிய கதைகள்


கடவுளைச் சரியாகத்தான்

நான் ஆராதிக்கிறேன்...


யாழ் தண்விகா

No comments:

Post a Comment