Thursday 2 June 2022

நினைக்கும்போது பேச வருவாய்...



 ❣️

மீண்டும்

அழைத்திருக்கலாம்


காத்திருந்தது

என் காதல்


❣️

கடவுள் எல்லாவற்றிற்கும்

ஒரு காரணம் வைத்திருப்பான்

என்றாய்


கடவுளை நம்புபவனில்லை நான்.

ஆனாலும்

நம்மைச் சந்திக்கச் செய்வதற்கு

காதல் என்னும் காரணம்

வைத்திருந்திருக்கிறாய் நீ

என நம்புகிறேன்.


❣️

பொய் சொன்னாலோ

யாரும் ஏமாற்றினாலோ

கண்ணீர் வந்துவிடுகிறது

என்றாய்.


நானோ

என் கவிதையோ

எப்போதும் ஏமாற்றுவதில்லை.

அப்புறம் ஏன் கண்ணீர்...


❣️

ஊரெல்லாம் திருவிழா

நம் ஊர்களில் திருவிழா இல்லை

என்று வருத்தப்படுகிறாய்


நாம் சந்திக்க வேண்டிய நேரம்

வந்துவிட்டது...


❣️

ஆயுசு நூறு என்றெல்லாம்

வரையறை எதற்கு?

அதற்கும் மேல் தான்.

எப்போதெல்லாம் என்னை நீ நினைப்பாயோ

எப்போதெல்லாம் உன்னை நான் நினைப்பேனோ

அப்போதெல்லாம்

உனக்கு நான் அழைப்பு விடுத்திருப்பேன்

எனக்கு நீ அழைப்பு விடுத்திருப்பாய்...


யாழ் தண்விகா 


❣️

No comments:

Post a Comment