Tuesday 28 June 2022

I ❣️ U டா எரும...!


என்னவோ போலிருக்கு

ஒரு பாட்டு பாடுடா

கேட்டா கொஞ்சம் மனசு சரியாகும்னு தோணுது


உண்மை சொல்லு பெண்ணே என்ன

என்ன செய்ய உத்தேசம்...


நிஜமாத்தான். பாடுடா.


தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்...!

உண்மை சொல்லு பெண்ணே என்ன

என்ன செய்ய உத்தேசம்...!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்

வந்து வந்து போவதென்ன..!

கட்டுமரம் பூப்பூக்க

ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காள நானே

கன்னுக்குட்டி ஆனேனே..!

தொட்டுத் தொட்டு தென்றல் பேச

தூக்கம் கெட்டுப் போனேனே..!

சொல் பொன்மானே...!

போதுமா...


இல்ல பத்தாது

இன்னும் நீ பாடி முடிக்கல.

கம்ப்ளீட் பண்ணு...


அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது 

சரிதானா..! 

அடி அம்மாடி...

ஒரு அலை வந்து மனசுல அடிக்குது 

அது தானா..!

உயிரோடு உறவாடும்

ஒருகோடி ஆனந்தம்..!

இவன் மேகம் ஆக யாரோ காரணம்...

இப்போ மனசு சரியாச்சா...


இப்படி நீ பாடிட்டே இருந்தா

மனசு சந்தோசமா இருக்கும்.

எப்பவும் மனசுக்கு ஒன்னும் ஆகாது.

இப்போ நான் நார்மல்.

சிரமப்படுத்திட்டேனா...

இல்லல்ல...


என் குரல மதிச்சு

நீயே கேட்கும்போது

நான் பாட மாட்டேனா...

உனக்காகப் பாடாம...

நல்லாப் பாடுனேனோ இல்லையோ

இப்போ நீ நார்மல்.

அது போதும்.


எனக்கு இந்த குரல் போதும்

என்று சொல்லி உன்னோட குரலை தாழ்வாக்க நினைக்கல.

இந்தக் குரல் தான்

உன்னை நோக்கி என்னைத் தேட வச்சது.

எனக்கு ஆறுதலா இருந்தது.

மடியில் கண்ணயரும் சுகம் தந்தது.

எனக்கான பேரின்பங்களை அடையாளம் காட்டியது.

வாழ்வைத் தந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்காகப் பேசிக்கொண்டே இருந்தது.

நான் பேசும் எல்லாவற்றிற்கும் ம் சொன்னது.

இந்தக் குரலில் என்னைக் காண வைத்தது.

சாகும் வரை என்னோடு வேண்டும் உன் குரல்.


என்னடி ஆச்சு என்னென்னமோ பேசுற...


கொஞ்ச நாளா உன்ன நிறைய மிஸ் பண்றேனோ எனத் தோணுச்சு. மனசு பாரமாச்சு. அதான்.


I ❣️ U பொம்பள.


I ❣️ U டா எரும.


யாழ் தண்விகா 


❣️

 

No comments:

Post a Comment