Thursday 9 June 2022

சொல்லாமல் கொள்ளாமல் கொல்லுதல்


தாய் தன் இடையில் 

அமர்த்தி

வைக்கப்பட்டிருந்த குழந்தையை காரணங்களேதுமற்று 

கீழே இறக்கி விட்டுச் செல்லும் 

நண்பகல் போல்

வாய்த்திருக்கிறது

எனக்கான வாழ்க்கை.


நீயில்லாமல்

எது நிம்மதி

நீதான் என்றும்

என் சன்னதி

என்ற வரிகளை

முந்திக்கொண்டு

வந்து விழுகிறது

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே 

என்ற வரிகள்-

என் மேல் இரக்கம் காட்டாத

உன் காதல்

காணும்போதெல்லாம்...


என்னை அவ்வப்போது

வெறுக்கும் முன்

கொஞ்சம் நீயும் பரிசீலனை

செய்யலாம்தான்

எனக்குள் நம் காதல்

வாழ்ந்து வருகிறது என்பதையும்...


யாழ் தண்விகா 


❣️


 

No comments:

Post a Comment