Wednesday 4 September 2019

24.07.2019
மாலை
நேரம் 4:36
UAR பேருந்து
சும்மா நிக்காதீங்க பாடல் ஒலிக்கிறது
பேருந்தில்
நான் அமர்ந்திருக்கிறேன்
பாடலுக்கு எப்படி நான் பதில் சொல்வது
சொன்னாலும் போய்ச் சேருமா...
ம்ம்ம் அடுத்து ஒலிக்கும் இசை சொல்லிவிட்டது
பாடலின் ஆத்மார்த்த உணர்வை
நிலாக்காயுது பாடல்
நேரம் நல்ல நேரம்
நிச்சயமா இல்ல
எனக்கு முன் சீட்டில் இரு வயதான அம்மாக்கள் அல்ல
அவர்கள் பாட்டிகள்
பக்கவாட்டில் ஆண்கள்.
ஒன்னும் பார்க்க முடில
இப்போ படியேறி வருவதும் ஒரு ப்பாட்டி...
Situation song எப்போ அமையும்...
கண்கள் பாவம் செய்ய விருப்பமின்றி மொபைல் உடன் பேசுகிறது...
தண்ணி கேட்டியே புள்ள
வரிகளுக்கு முன் வரும் ஹ்ஹா என்ற பெண் குரலுக்கு யாரும் முகம் சுழிக்கவில்லை
ம்ம்ம் ஆமா நான் பார்த்தேன்.
இடி விழும் சத்தம்
ராஜா இசை
ரொம்ப பிடிக்கும் போல பேருந்து ஓட்டுனருக்கு
வயது 30க்குள்
கிட்டக்க ஒரு லேடி கூட இல்ல
ஒரே ஒரு ஆளுதான்
யாருக்காக இப்படிப் பாடல்
யம்மா யம்மா லேடி டாக்டர்
நல்லாருக்குய்யா உங்க ரசனை
கோவில் திருவிழா போல் கொண்டாட்ட மனநிலைல இருக்கிறார்
நளினமா வளைவுகள் கடக்கிறார்
பதக் பதக் என்கிறது இதயம்
அடேய் சாய்ச்சுப்புடாதடா
பேருந்து இருக்கைகள் நிரம்பிவிட்டது
ஆனாலும் பாடலுக்கு பொருத்தமா எனக்கோ ஓட்டுனருக்கோ ஏதும் அமைந்ததா என்ற உங்க கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லவேண்டும்
இது ஜெயமங்களம்
ஒரு சீரில்லாம இந்த பாட்டில் ஆண் பாடுறார்
கேட்டாச்சு
சாமக்கோழி கூவியாச்சு பாடல் இப்போ
வா ஆத்துப்பக்கம் நான் காத்திருக்கேன் என்கிறார் அந்த ஆண்.
நல்லா வருவீங்கடா
இந்த சமூகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கொண்டுவருவதில் இந்தப் பேருந்திற்குப் பெரும் பங்களிப்பு உண்டு. ஏதாவது விருதிற்குப் பரிந்துரைக்கலாம் பேருந்தின் உரிமையாளருக்கு. ஆமா நல்லா படம் இயக்குனவன விட்டுட்டு தயாரிப்பாளருக்கு விருது கொடுப்பது தானே முறை...
ஆனா ஒன்னு
செம climate
ஜன்னல் பக்கம் திரும்புனாலே பக்கத்தில் உக்காந்து கைகள் கோர்த்து தோள் சாய்க்க தோள் சாய்ந்து பயணிக்க ஒரு பிடிச்ச மனுஷி இருந்தா நல்லாருக்கும் என தோணுது...
என்ன பண்ண... இல்ல...
கைவலிக்குது கைவலிக்குது மாம்மா பாடல்
மாம்மா என்ற குரலுக்கு நான் ம்ம்ம் சொல்லுடி என்னடி என்று பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
அவள் குரல் அப்படித்தான் இருக்கும்
முதியோர்களை எதற்கோ தூண்டிவிடுவதுபோல பாடல்கள். நான் எப்படி இந்த பேருந்தில். எனக்கும் சேர்த்தா இந்த பாடல். இல்ல. நான் மற்ற மக்களைப் பார்வையிடுகிறேன். என்னதான் பண்ணுறாங்க இந்த மக்கள். காமத்தை இப்படி பகிரங்கமா பாடுவதை ஏற்றுக்கொள்கிறார்களா... நல்லதுதான். காமமும் புனிதம் தான். அது காதலை விட கொண்டாடப்பட வேண்டியதுதான். கை வலிக்கல மாம்மா
இப்போ கை வலிக்கல மாம்மா
என முடிகிறது பாட்டு
அதான் சரி
காத்து காத்து ஊத்தக்காத்தும் வீசுதே
ரேகா விஜயகாந்த்
இப்படி படமெல்லாம் நடிச்சுருக்காங்க
ம்ம்ம் காற்று பாட்டிற்கு விசிறி விடுகிறது
கலைந்த முடியோடுதான் நான்
யார் அந்த ரேகா...
உள்ளுக்குள் இருக்கிறாள். அவள்தான் கலைத்திருப்பாள்.
அவளுக்கு தலையில் கொட்டனும்
கிள்ளி வைக்கணும்
கலைந்து கிடக்கும் முடியை இன்னும் கலைத்து விடணும்
விளையாடனும். அவளை நினைத்தால் உள்ளே பரவசக்காற்று பூப்பதில் அர்த்தம் இருக்கு. அவள் பூங்காற்றாக எப்போதும் இருக்கிறாள்.
மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் இருக்கு
கணக்குப் பண்ணுங்க கன்னிப் பொன்னிருக்கு மாம்மா
கடைசியா கட்டிலுக்கு அழைத்துப்போகிறது பாட்டு
பயணத்தின் இலக்கு நோக்கி விரைகிறது பேருந்து
என்ன சண்டையா இருந்தாலும் இந்த பாடல்கள் கேட்டு ஊர் திரும்புபவர்கள் மல்லிகை அல்வா உடன் செல்வார்கள் என்பது நிதர்சனம். எதுவும் வாங்காமல் இப்படியே இதே பேருந்தில் திரும்பும் மனிதர்கள் பாக்கியவான்களாக இருக்க முடியாது
சாத்தான்கள் அவர்கள்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் அவர்களிடம்.
நான் இறங்கும் நிறுத்தம் வந்துவிட்டது
விளக்கு ஏத்தத்தான்
பகல் வெளிச்சம் இறங்கட்டும் பாடல்...
இறங்கிட்டேன்
பகல் இறங்கவில்லை
காம இரவு உயிரில் இறங்கிவிட்டது...
நேரம் 5:07

No comments:

Post a Comment