Wednesday 4 September 2019

பயணமும் பாடல்களும்...


ஓ ப்ரியா ப்ரியா
பாடலில் தொடங்குகிறது
பயணம்...
காதல் சோகம்
பிழிகிறது
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
அடுத்த பாடல்
அடடா
குடும்ப சோகம்...
என்னாச்சு ஓட்டுனருக்கு...
கண்ணீர் விடுகிறாரா
உம்முன்னு இருக்காரா
என்னாச்சு
இல்ல சிரிச்சிட்டு இருக்கார்
பயணிகள் பாவம்
பாவமா கேட்கிறார்கள்
ஒரு கூட்டுக்கிலியாக...
ஆமா
கிலி தான்
எப்படி அதுக்குள்ள
சோகம் சரியாச்சு
சிவாஜி தான் பெரிய நடிகராச்சே
அவர் சிரிச்சிட்டே அழவும்
அழுதுட்டே சிரிக்கவும் செய்யும்
வித்தகர்
நான் போடும் வேஷம் எனக்கே தெரியாது
என்றொரு பாடலில் பாடியிருப்பதிலிருந்து
அவரின் நடிக்கும் வன்மம்
பிடிபடும் நமக்கு...
நெல்லின் விதை போடாமல்
நெல்லும் வருமா
என்ற வார்த்தையை
நீங்கள் கேட்டுப்பாருங்கள்
இந்த கிலி பாடலில்...
கிலி தான்...
மீண்டும் காதல் சோகம்.
ஒரு ஜீவன் தான்
உன் பாடல் தான்...
ரஜினியின் புதுக்கவிதை...
மாறாதது...
1996 முதல் இப்போ வரை
மாறாத கவிதை
வயசு கூடினாலும்
மாறாத வசனம்...
யார் கேட்கச்சொன்னது
கேக்காம இருந்தாலும்
எவனாவது சத்தமா வச்சு பாட்டை
கேக்க வைக்கிறான்...
நான் குடிப்பேன்
குடிச்சிட்டே இருப்பேன்
கேக்குறதுக்கு பொண்டாட்டியா
இருக்கா...
Its impossible I say...
ஆமா
நீ அரசியலுக்கு வரமாட்ட...
பட்டு வண்ணச் சேலைக்காரி
என்னைத் தொட்டு வந்த சொந்தக்காரி
இந்தக் குரல்
எந்த நடிகருக்கு...
ரஜினி சிவாஜி
இருவரும்
அண்ணன் தம்பியாக
எந்தப் படத்தில்
நடித்திருப்பார்கள்...
இருவருக்கும் பொருந்தும்...
இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம் என்று
பின்னணியில் ஒலிக்க
ரஜினி நடந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம் தானே...
சிவாஜி என்றாலும் பொருத்தமே...
ஏ குருவி சிட்டுக்குருவி என
காதலில் லயித்தவர்...
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடி வா...
கலைந்த கேசம்
ஓடியபடி காற்றில் மிதக்கும் ஸ்டில்ஸ்
ராதாவா அம்பிகாவோ
கையருகில் பூமாலை
காதலின் கோபுரம்
என்கிறார்
எப்போதோ பார்த்த பாடல்
எந்த உடை போட்டாலும்
பொருத்தமற்று இருந்தாலும்
பல கோணங்களில் பார்த்தாயிற்று
இருவரையும்...
சலிக்கல சொல்வதா
சகிக்கல சொல்வதா...
இரண்டாம் வகைமையை
சொல்லும்போது
சின்ன மணிக் குயிலே
எனப் பாடத் தொடங்குகிறார் ராதா
இன்னும் கூடுதலாக
என்னை நான் சாட்டையில்
அடித்துக்கொள்ளனும் போல இருக்கு
சகிக்கல தான்...
பேரைச் சொல்லவா
அது நியாயம் அல்லவா
பிக் பாஸ் வந்து விட்டார்
16 வயதினிலே ஸ்ரீதேவியுடன்...
உடல் கூராய்வு செய்தனர்
மதுவின் உடலை
சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருந்தது தெரிந்தது
உடல் கூராய்வு செய்தனர்
ஸ்ரீதேவியின் உடலை
மது இருந்தது...
கவிதை நினைவில் வரும்போதே
சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை என்று சொல்லிவிட்டார் கமல்...
பேசக்கூடாது
வெறும் பேச்சில் இன்பம்...
ரஜினியை கொஞ்சம் ஓரமாக நிறுத்திவிட்டுப் பார்ப்போம்
சில்க்...
ஆகச் சிறந்த பேரழகி.
எத்தனை பெண்கள் ஒத்துக்கொள்வார்கள்...
ஆண்களின் ரசனையை
முடக்கி வைத்து
பெரும் ரசனை வாழ்வை
உள்ளுக்குள் வாழ்ந்து தொலைக்க வைக்கும் ராட்சசிகள்
உங்களில் யார் அடுத்த சில்க்
போட்டிக்குத் தயார்...
நாங்கள் நடத்துகிறோம்
பரிசுத்தொகையை
அப்புறம் பார்த்துக்கொள்வோம்
தயாரா
பெண் மக்களே தயாரா
சில்க்கே நமஹ...
பூவே செம்பூவே
உன் வாசம் வரும்...
ம்ஹூம்
ஒன்னும் வரவேணாம்
தூக்கம் வருது
என்பதன் பின்னணியில்
கதாநாயகி நல்லால்ல
என்பதை
சொல்லத் துடிக்குது மனசு.
சொல்லிட்டேனா
சரி உண்மையைத்தானே சொன்னேன்...
அந்த ராதாரவி இப்படி
அடக்கம் ஒடுக்கமாப் பாடிட்டு
நயன்தாராவை அப்படிப் பேசிறுக்கக்கூடாது...
சமகாலத்தின் படமான பில்லாவில்
அவர் வரும் ஒரு காட்சி
கண்ணுக்குள் இருக்கிறது.
ராதாரவி ஒழிக
என்பதைத் தவிர என்ன சொல்ல...
அவரும் பென்தானே
ம் முக்கியம் மூணு சுழி பெண்
நாக்கை அடக்கவும்
ராதாரவி அவர்களே...
அடக் கண்றாவியே
ரப்பப்ப ரப்பப்பரி
இளையராஜாவே இந்தப்பாட்டை
ப்போ கேக்கமாட்டார்டா
சிறந்த வில்லன் விருதுக்கு தேர்ந்தெடுக்கலாம்
பாடல் ஒலிப்பதிவாளருக்கு...
நேரம் 11:15
என்னை நெனச்சா
பரிதவிச்சா
துடித்துடிச்சா...
இந்தப்பாட்டுக்கு எப்படி
எல்லோரும் தூங்குறாய்ங்க
அடுத்த மெல்லிசை பாடலுக்கு
முழிப்பாய்ங்க போல
பார்க்கலாம்
கேட்கலாம்...
சந்தனக்காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோசப்பாட்டே வா வா
பாடல்...
ஜன்னலோரக்காற்று...
அடடா...
என்ன அற்புத பாடல்...
Vibration...
எங்க இருக்கீங்க
செம்பட்டி கடந்து...
இன்னுமா செம்பட்டி...
அதிரும் குரலில்
சந்தனக்காற்று
தொலைந்து போனது...
அடேய் டிரைவர்
வேகமா ஓட்டுடா பஸ்ஸ...
உன்ன நெனச்சேன்
பாட்டுப்படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
பாடல் ஒலிக்கிறது...
டிரைவர் அண்ணே
பஸ் மெதுவாவே போகட்டும்...
என்னை நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே
ஞானத் தங்கமே...

No comments:

Post a Comment