காட்டுமிராண்டித்தனம் நாகரிகம் இரண்டும் எப்படி மனிதர்களின் வழிபாட்டில், பண்பாட்டில் சொல்லாடல்களாக உருவாக்கப்பட்டு திணிக்கப்பட்டன, அவற்றிற்கு வரலாறு எவ்விதத்தில் பயன்படுத்தப்பட்டது, ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்களால் அவை எவ்வாறு கையாளப்பட்டன, தீ மிதித்தல், பறவைக்காவடி, குழி மாற்றுச் சடங்கு, கோவில்களில் உயிர்ப்பலி தடை இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றிப் பேசுகிறது இந்நூல். சைவ சாமி நல்ல சாமி, அசைவ சாமி கெட்ட சாமி என்று பழக்கப்படுத்தப்பட முனையும் இந்துத்துவ அரசியலின் முகத்தையும் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட ஒரு சில சாதிக்கான விளையாட்டு என்பது போலான தகவல் இடம்பெற்றுள்ளது. அதை எப்படி தமிழர்களின் வீர விளையாட்டு என்றும் தமிழ்ப் பண்பாட்டின் மரபுத் தொடர்ச்சியாகவும் கருத முடியும் என்று தெரியவில்லை. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, விசிக தலைவர் திருமா, ஆர்.நல்லகண்ணு, சு.வெங்கடேசன், எஸ்வி.ராஜதுரை, தமிழ் தேசியவாதி ராசேந்திர சோழன், கி.வீரமணி ஆகியோரின் கருத்துக்கள் அங்கங்கே இடம்பெற்றுள்ளன. வாசிக்க வேண்டிய நூல்...
👍
ReplyDelete