Saturday 18 April 2020

யா ஒ #சிவசங்கர் எஸ் ஜே

யா - ஒ
மறைக்கப்பட்ட மார்க்கம்

#சிவசங்கர்_எஸ்_ஜே

வெற்றிமொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்

 128பக்கங்கள்

திருச்சாணரத்து மலையின் சமணப்பள்ளி பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை தாக்குப் பிடித்து இருக்கிறது. அதில் பயின்று பின் அதனின்றும் வெளியேறிய யா ஒ ஆசான் உண்டாக்கிய மார்க்கம் பேசிய 108 உரையாடல்களை இந்நூலில் கூறியுள்ளார் ஆசிரியர். குரு சீடர் இவர்களுக்கிடையே நிகழும் உரையாடல் வாசிக்க எளிமையாக, புரிந்துகொள்ளும் விதமாக, கொஞ்சம் வாழ்வின் உள் அர்த்தங்களை உணரவும் வாய்ப்பளிக்கிறது. ஆசீவகம், பௌத்த கருத்துகள் இந்த உரையாடலில் தொக்கி நிற்பதாக ஆய்வுக் குழுவினர் கூறியதாக நூலாசிரியர் கூறுகிறார். நூலில் கடைபிடிக்க இயலாத விசயங்கள் என்று எதைக் கூறியும் வாசிப்போரை சிரமத்திற்கு மார்க்கமும், நூலாசிரியரின் உரையும் ஆளாக்கவில்லை என்பது பெரு மகிழ்வான ஒன்று.

ஒவ்வொரு உரையாடலையும் ஒவ்வொரு ஓவியத்தின் மூலமாக சிறப்பாக்கித் தந்திருக்கிறார் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழர்.

மார்க்க கடலில் ஒரு துளி:

#சுயம்

இது தனியே உங்களுக்கெனக் கொண்டு வந்திருக்கிறேன் என்றபடி மரத்தின் முதல் கள்ளை முன்னே வைத்தான் யாவா(சீடன்)

ஆஹா என்றவாறே ரசித்து ருசித்த ஆசான் (யா ஒ) யாவாவை ஏதேனும் கேட்கும்படி சைகை செய்தார்

உண்மையில் தனித்துவம் என்பதுதான் என்ன ஆசானே

அது மழையில் கரையாத சாயம் யாவா

வாழ்த்துகள் தோழர் சிவசங்கர்
தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்...

யாழ் தண்விகா

No comments:

Post a Comment