Wednesday 20 July 2022

மோர்க்காரம்மா...



4பேர். ஒவ்வொரு நபரும் மொத ரவுண்டு ஒரு டம்ளர் மோர் குடிச்சாச்சு. ரெண்டாவது ரவுண்டுக்கு ரெண்டு பேர் மட்டும் ஒவ்வொரு டம்ளர். ஊத்திக் கொடுத்த பொம்பள மொத்தம் 6 டம்ளர்னு சொல்றப்பதான் எதுக்குடா இந்தம்மா டம்ளர் கணக்கு சொல்லுதுன்னு பாத்தானுங்க. 60 ரூவா ஆச்சுய்யா. கொடுங்கனு மோர் ஊத்தித் தந்த பொம்பள சொல்லவும் குடிச்ச ஆளுக எதுக்கும்மா காசு தரணும்? நீதானம்மா போற ஆளுகளை நிப்பாட்டி ஊத்திக் கொடுத்தனு சொன்னானுங்க. மாரியாத்தா சன்னதில வம்பு வளக்காம காச கொடுப்பான்னு சொல்லுச்சு மோர்க்காரம்மா. காசுன்னு முன்னாடியே சொன்னா நாங்க எதுக்குமா வாங்கிக் குடிக்கப் போறோம் அதும் இந்த மழை நேரத்துலனு சொல்லிக்கிட்டே 50 ரூபா எடுத்துக் கொடுத்துட்டு பொலம்பிட்டே போனானுங்க. 


ஒரு சந்தேகம் வந்து ஓரமா நின்னு பார்த்தேன். ஏன்னா வீரபாண்டி மாரியம்மன் கோயில்ல இதே போல நானும் ஓசின்னு வாங்கி மடக் மடக்குன்னு குடிச்ச பின்னாடிதான் காசக் கேட்டானுங்க. அது நடு மத்தியானம். அதக் கூட ஏத்துக்கலாம். இது ராத்திரி ஒன்பதரை மணி. ஓசின்னாலும் ஒரு நேர காலம் வேணாமாடா...


இதேபோல போற வார ஆட்களை நிப்பாட்டி தின்னீர் போட்டுவிட்டு காசு கேட்க மஞ்சச் சேல கட்டி இன்னொரு அம்மா.


திருவிழாக் காலத்தில் பூக்கும் மோர்க்காரக் கும்பல்கிட்ட, தின்னீர் போடும் ஆளுங்க கிட்ட எச்சரிக்கையாக இருங்க பக்தர்களே.


#மாரியாத்தா_சார்பாக_உங்கள்_தோழர்...


யாழ் தண்விகா


🔥


 

No comments:

Post a Comment