ஆயிஷா
இரா.நடராசன்
மீண்டும் இன்று வாசித்தேன். ஆயிஷா ஒரு ஆசிரியையால் மட்டுமாவது புரிந்துகொள்ளப் படாமல் போயிருந்தால் அவள் அடையாளம் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே பரிதாபமாக இருக்கிறது. எல்லா ஆசிரியர்களுமே ஏதாவது ஒருவகையில் மாணவனின் அறிவை அவமானப் படுத்துகிறார்கள் என்றொரு வாக்கியம் இந்தக் கதையில் வருகிறது. அதற்காக அந்த மாணவன் அடையும் இன்னல்கள் எவ்வளவு? அறிவை மட்டுப்படுத்தி வைப்பதோ தன்னை விட மாணவன் அறிவாய்ப் பேசுவது என்பதை தன்னைத் தாழ்த்திக்காட்டும் ஒரு செயல் என்று ஆசிரியர் கருதுவதோ அபத்தமான ஒன்று என்பதை எப்போது உணரப்போகிறார்கள் கற்றுத் தருவோர். மாணவனைப் புரிந்துகொள்ள, மாணவனை வழிநடத்த நூல் பல கல் என்பதை ஆசிரிய சமூகமும் உணரவேண்டும். ஆயிஷா கதையல்ல. பாடம்.
வாசிப்போம் உறவுகளே.
No comments:
Post a Comment