Friday, 20 February 2026

மாவீரர் ஒண்டிவீரன் பகடை #எழில்.இளங்கோவன்

 

மாவீரர் ஒண்டிவீரன் பகடை

எழில். இளங்கோவன்


கருஞ்சட்டைப் பதிப்பகம்


நெற்கட்டும் செவ்வயல் பாளையத் தலைவர் பூலித்தேவன். அப்பாளையத்தின் படைத்தலைவன் ஒண்டிவீரன். இருவரும் சாதியால் வேறுபட்டு நிற்பினும் நட்பால் இணைந்து பாளையத்தைக் காத்துவந்துள்ளனர். பிரெஞ்சு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் பல போர்க்களங்களில் இணைந்தே போரிட்டுள்ளனர். நெற்கட்டும் செவ்வயல் பாளையம் பல காலமாக அருந்ததியர்கள் ஆண்டுவந்த பாளையம். அங்கு பஞ்ச காலத்தில் பூலித்தேவன் பாட்டனார்கள் வருகை தர, காலப்போக்கில் பூலித்தேவன் தலைவனாகவும் வர வாய்ப்பு அளிக்கிறது. அது குறித்த தகவல்கள் இல்லை. மேலும் எப்படி அருந்ததிய மக்களிடம் இருந்த ஜமீன் எப்படி பூலித்தேவன் வசம் சென்றது என்பது குறித்த தகவல் இல்லை. ஒண்டிவீரன் களம் கண்ட போர்கள் நாட்கள், வருடத்தோடு இருக்கின்றன. ஆனால் அவரின் பிறந்த வரலாறு இல்லை. இன்னும் பல தகவல்கள் தேடி அளித்திருக்கலாம். ஒண்டிவீரன் குறித்த கதைப்பாடல்கள் நம்பும்படியாக இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார். ஒரு வீரன் வரலாறு இப்படி இருந்திருக்காது என்றே நமக்கும் தோன்றுகிறது. பூலித்தேவன் கடைசிப் போருக்குப் பின்னால் காலாடி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், பின் தன்னுடைய குலதெய்வ கோவில் என்று தப்பித்துச் செல்கிறார். அதன்பின் என்ன ஆனார் என்று வரலாற்றில் தகவல் இல்லை. பூலித்தேவன் தலைமறைவுக்குப் பின் பாளையத் தலைவராக வந்த ஒண்டிவீரன், பூலித்தேவனின் 3 குழந்தைகளையும் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்கிறார். அதே நேரம் ஒண்டிவீரன் மறைவு குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்கிறார் ஆசிரியர். இன்னும் தேடலை அதிகப்படுத்தி வரலாற்றை முழுமைப் படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு தொடக்கமாக நாம் எடுத்துக்கொண்டு நாமும் வாசிப்பின் மூலம் இன்னும் ஒண்டிவீரன் குறித்தும் பூலித்தேவன் குறித்தும் அறியவேண்டும்.


வாழ்த்துகள் தோழர்.

No comments:

Post a Comment