ஐரோப்பிய நாடோடிக் கதைகள்
லெஸ்லி ப்ரூக்
தமிழில்: சரவணன் பார்த்தசாரதி
பாரதி புத்தகாலயம் வெளியீடு
4கதைகள்
நன்னெறிக் கதைகள், துணைப்பாடம் இப்படியெல்லாம் பள்ளிக் குழந்தைகள் கதைகள் மூலம் வாழ்வியலை அறிந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. நல்லன தீயன குறித்தோ வாழ்வு குறித்தோ மனிதர்கள் குறித்தோ எவ்வித கருத்தும் இல்லாத தலைமுறை உருவாகிவருவது பெரும் சிக்கலை விளைவிக்கவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எளிமையான பேச்சு மொழியில் உள்ள கதைகள். நகைச்சுவையாக குட்டிப் பிள்ளைகளை பாடம் நோக்கி கவனத்தைத் திருப்ப இக்கதைகள் உதவும். தங்க வாத்து, மூன்று கரடிகள், குட்டிக் கட்டையன், ஓநாயும் மூன்று பன்றிக் குட்டிகளும். எந்தக் கதையும் எந்த கதாபாத்திரத்தையும் பகடி செய்யவில்லை. தங்க வாத்து கதை, உதவும் குணம் நமக்கு நன்மையைச் செய்யும் என்ற கருத்தை உணர்த்துகிறது. மூன்று கரடிகள் கதை, எக்கருத்தையும் சொல்லவில்லை. ஆனாலும் நன்று. குட்டிக் கட்டையன் கதை நகைச்சுவை. உருவக் கேலி இல்லை. ஓநாயும் மூன்று பன்றிக் குட்டிகளும் கதை, ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து எப்படி இந்த வாழ்வைத் தக்க வைப்பது என்பதைக் கூறுகிறது.
வாசிக்கலாம் குழந்தையாக.
குழந்தைகளுக்காக.
குழந்தைகளோடு.
வாழ்த்துகள் தோழர்.

No comments:
Post a Comment