Saturday, 21 February 2026

எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை #முகில்

 எம் ஆர் ராதா

கலகக்காரனின் கதை


முகில்


சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்


ராதா குறித்து பல தகவல்கள் நூல் முழுதும். சிறு சிறு தகவல்கள் ஆயினும் வரலாற்றின் போக்கிலும் அது பதியும் வகையிலும் ஆசிரியரின் மொழி நடை.

நாடகத்தை, கலையை உயிராகக் கருதி கடைசி வரை வாழ்ந்த ஓர் அசாத்திய கலைஞனின் வரலாறு.


முற்போக்கு நாடகங்கள், புராணக் குப்பைகளைக் கிண்டலடிக்கும் நாடகம் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு எதிர்ப்புகள் அதை ராதா கையாண்ட விதம் இன்றைய ஹீரோக்கள் அறியவேண்டிய பாடம். Time to lead என்று துணைத் தலைப்பு கொடுத்துவிட்டு படம் ஓட அரசிடம் மண்டியிட்டு வாழ்ந்த நடிகர்கள் போலில்லை ராதா.


பெரியார், அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் என பலர் வந்து போகின்றனர். ரத்தக்கண்ணீர் இவர் தனது ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடித்த படம் என்பது ஆச்சர்யம். எம் ஜி ஆரைச் சுட்டதற்கான காரணம், அதற்காக அலட்டிக் கொள்ளாமல் அதை சரியென்று சொல்லும் துணிச்சல் ராதாவுக்கு மட்டும் தான் இருந்திருக்கும். காமராஜர், பெரியார், அண்ணா இவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறித்த பல தகவல்கள். சிவாஜியிடம் ஒருமுறை வீட்டில் சென்று சாப்பாடு எடுத்துவர காரைக் கேட்கிறார் ராதா. சிவாஜி, அண்ணே அது இம்பாலாண்ணே என்று சொல்கிறார் விலை உயர்ந்த கார் என்று சொல்லாமல். சில காலத்திலேயே அதே இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி வந்து சிவாஜி முன் நிறுத்த அவர் திகைக்கிறார். அப்போது ராதா அது வெறும் தகரம் தான். வைக்கோல் ஏற்ற வண்டி கிடைக்காததால் இதில் ஏற்றச் சொல்லிவிட்டேன் என்று மனிதம் போதிக்கிறார். நடிகர் அசோகனிடம் பேசும் போது ஹீரோ நடிகர்களின் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்கிறார்.


ராதாவின் பேட்டி, மலேசியாவில் பேசிய பேச்சு, நடித்த படங்களின் பட்டியலும் பின் இணைப்பாக தந்திருக்கிறார்.


வாசிக்க வாசிக்க மனதில் இருந்த ராதாவின் பிம்பம் உச்சத்திற்குச் சென்று நிற்பதை மாற்றவே இயலாது.


வாழ்த்துகள் Mugil Siva தோழர்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment