உய்யடா உய்யடா உய்!
கட்டுரை நூல்
காலச்சுவடு வெளியீடு
ரூ. 125
இசை
நீண்ட நாட்களுக்குப் பின் வாசித்த கட்டுரை நூல். கட்டுரை வாசிக்க ரொம்ப பொறுமை வேணும், கொஞ்சம் அறிவாளியா இருக்கணும் அப்படி இப்படின்னு இதுக்கு முன்னால பலர் சொல்லியும் எனக்குள்ள நானா அதை உண்மைன்னு நம்பியும் இருந்திருக்கிறேன். அதுக்குத் தகுந்த மாதிரி பல கட்டுரையும் இருந்திருக்கு. ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாசிக்க வாசிக்க உய்யடா உய்யடா உய்! என்று சத்தமிட்டு விசிலடித்து உஸ்... கவனிக்கணும் எவ்வளவு முக்கியமான விசயம் இது என்று மௌனம் காத்து... இப்படி பல கோணங்களில் ரசிக்க வைத்தது.
எழுத்தாளர் சுகுமாரன்
நகலிசைக் கலைஞன் ஜான் சுந்தர்
காமத்துப்பால்
கவிஞர் மனுஷ்யபுத்திரன்
பொன்மொழிகள்
எழுத்தாளர் வண்ணதாசன்
அன்பு செய்தல்
இயக்குநர் மிஷ்கின்
மகாகவி பாரதி
குறித்த கட்டுரைகள். ஒவ்வொன்றிலும் பிறர் பார்வை, தன் பார்வை, உள்ளது கூறல், விடுபட்டவை கூறல், பகடி எனப் பயணம் செய்யும் கட்டுரை ஓரிடத்திலும் அலுப்புத் தட்டவில்லை என்பதும் மேற்சொன்ன தலைப்புகள் அத்தனையிலும் நாம் அறியாத ஒரு புதிய செய்தியாவது இருக்கும் என்று கூறும் வண்ணம் சிறப்பான தொகுப்பாக அமைந்திருக்கிறது.
வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.
வாழ்த்துகள் தோழர்.

No comments:
Post a Comment